கள்ளக்குறிச்சி அம்மன் நகரில் உள்ள ஸ்ரீ ஆரா ஆனந்த ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை
புரட்டாசி மாத மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி அம்மன் நகரில் உள்ள ஸ்ரீ ஆரா ஆனந்த
ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயிலில் எம்பெருமானுக்கு
சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,
பள்ளி கொண்ட ரங்கநாதர் கோலத்தில் பக்தர்களுக்கு
அருட் காட்சியளித்தார். கள்ளக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார
கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு
பெருமாளை தரிசனம் செய்தனர்.















